Thursday, 16 November 2017

தனியார் நிறுவனத்தின் வேலைக்காக தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள் ?. இதோ உங்களுக்கான பதிவு ?. Preparing for Interviews

நேர்முக தேர்வில் உங்களுடைய பணி என்ன ?.
Product info
உங்களுடைய முழு திறமையையும் வெளிக்கொணரும் இடம் தான் நேர்முகத்தேர்வு. நாம் எவ்வாறு படித்தோம், நமக்கு எவ்வளவு தொழில்சார் அறிவு உள்ளது என்பதை நிரூபிக்கும் களம் தான் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் உங்களின் திறமையை, உங்களின் அறிவை மற்றும் உங்களின் அனுபவத்தை எவ்வாறு நிரூபிக்கிறீர்களோ அதை பொறுத்தே தேர்வின் முடிவு அமைந்திருக்கும்.

தேர்விற்கு தயார் செய்யும் வழிமுறைகள் இதோ உங்களுக்காக !!


1 ) நிறுவனத்தை பற்றி ஆய்வு செய்தல் :


  • தொழில் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
  • அந்நிறுவனத்தின் தற்போதைய பத்திரிகை வெளியீடை படித்து அறிந்து கொள்ளவும்.
  • அந்நிறுவனத்தின் குறிக்கோள் வாசகங்களை பற்றி அறிந்து கொள்வது நமது கடமையாகும்.


2 ) தகுதி மற்றும் திறமையை ஒப்பீடு செய்தல் :


  • வேலையின் விவரங்களை ஆய்வு செய்யுங்கள்
  • படிநிலையை ஆராயுங்கள்
  • நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவு மற்றும் திறன் தேவைப்பாடுகளை பக்கம் பக்கமாக பார்த்து தெளிவுபெறுங்கள்.


3) ஆடை நாகரிகம் அவசியம்.


  • உங்களுடன் கொண்டுசெல்ல வேண்டிய பொருள்களை பற்றி திட்டமிடுங்கள்.
  • நிறுவனத்தின் அழைப்பு கடிதம் மிகவும் முக்கியம்.
  • உங்களை பற்றின தரவு மிகவும் அவசியம்.
  • தொலைபேசியை  தூர வைப்பது நல்லது.


4) கேட்கப்படும்  கேள்விகளுக்கு அர்த்தமுள்ளவனவற்றை மட்டும் பதிலாக சொன்னால் சாலச்சிறந்தது. 

5) கவனம் முழுவதையும் கேள்வி கேட்பவரிடம் மட்டும் செலுத்தவும்.

6) முடிவு:

எல்லா நேர்முகத்தேர்வுக்கு உங்களிடம் ஏதேனும் கேள்வி உள்ளனவா என்று தான் முடியும்?.

பெரிய அறிவுசார் மேதை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஒன்றும் இல்லை என்ற பதிலுடன் இடம் நகர்வது நன்று.

உங்களுடைய தேர்வு முடிவு நன்றாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

வாழ்த்துக்கள். 

நன்றி. 


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.









Tuesday, 14 November 2017

கல்லூரி முடித்து வேலை தேடுபவரா நீங்கள்?. இதோ உங்களுக்கான பதிவு


எங்கே செல்கிறது நமது வாழ்க்கை பாதை ?.Why is it Important to Choose the Right Career?


வாழ்க்கையில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பணம் அவசியம் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளது, சிலர் தவறான வழியில் பணம் ஈற்றுகிறார்கள். பலர் நேர்மையான முறையில் உழைத்தும், தக்க சன்மானம் கிடைக்காமல் தன்னுடைய அன்றாட வாழ்வில் சிரமப்படுகிறார்கள்.


நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் உங்களது வாழ்க்கை பாதையை நீங்கள் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்தது மட்டும் இல்லாமல் அதன்வழி செல்லவேண்டும். எல்லாம் சரி, நமது வாழ்க்கையை பாதையை , எப்படி தீர்மானிப்பது என்று தானே யோசிக்கிறீர்கள் ?. 

இதோ உங்களுக்கான பதில்.


நம்மில் பலபேர் பல இக்கட்டான சூழ்நிலை மற்றும் குடும்பத்தின் தள்ளுதலின் காரணமாக, ஏதோ வேலை கிடைத்தால் போதுமென்று நினைத்து, வேளையில் அமர்ந்திருப்போம் . அதில் தவறொன்றும் இல்லை. நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகள் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

ஆரம்பத்தில் நாம் வேலை செய்கிறோம் என்று சொன்னால் நமக்கு பெருமிதமாக தான் இருக்கும் ஏனென்றால் அந்த சமையத்தில்  நண்பர்களுள் நாம்  மட்டுமே வேலைக்கு செல்வோம். அந்த ஆனந்தம், மிக குறுகிய காலம் மட்டுமே. தவறான வேலையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.  சரி, தவறான வேலையில் உள்ளோம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது ?.


  • நீங்கள் அடிக்கடி வேலை தேடுபவர்களாக இருப்பிர்கள் 
  • உங்களை அடிக்கடி வேறுஒரு வேலை தொந்தரவு செய்யும். உங்கள் மனது நீங்கள் செய்யும் வேலையில் நிம்மதி அடையாது.
  • அதிக சம்பளம் கூட உங்களை வேறுவேளை பார்க்க தூண்டும் ஆயுதம்.
  •  
  • ஆனால் பணம் உங்களை வாழ்க்கையில் சோர்வடைய செய்யும். நீங்கள் எத்தனை வேலை தேடி செய்தாலும், உங்களுக்கு நிம்மதி தராது.


உங்களது வாழ்க்கை பயணத்தை எப்படி அமைப்பது?.

நீங்கள் எப்பொழுதெல்லாம் வேலை தேடுகிறீர்களோ?. அப்பொழுதெல்லாம் நீங்கள் மனதில் கொள்ளவேண்டியது, நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ஒவ்வொருநாளும் திருப்தி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் தருமேயானால் அது தான் உங்களுக்குரிய வேலை என்பதை எப்பொழுதும் மறவாதீர்கள். 


  • நீங்கள் நேர்மையாக உங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளவேண்டும். 
  • தேடும் வேலை உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஆர்வத்தை உண்டு பண்ணவேண்டும்.
  • செய்யும் வேலை உங்களின் திறனை உபயோகப்படுத்தி கொல்வதுமட்டும் இல்லாமல், அதிகரிப்பவனாகவும் இருக்க வேண்டும்.
  • இவைகள் உங்களுடைய பாதையை தேர்வு செய்ய உதவும்.


சரியான வேலையை தேடுவதில் முக்கியத்துவம் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.